Thursday, September 24, 2009

கற்பகத்தைத் தேடி...

28

ராராரோ ராரிரரோ
என்கண்ணே
ராரிரரோ ராராரோ

கற்பகத்தைத் தேடி காண
வரும் போது என் கண்ணே
உன்னரிய அம்மானும்
என்ன கொண்டு வந்தாக..

கொத்துவிடா நெத்தும்
கோதுபடா மாங்கனியும்
கோடைப் பலாச்சுளையும்
குலை சேர்ந்த மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும்
பக்குவமா மாங்கனியும்
அக்கரையிச் சக்கரையும்
அதிமதுர தென்னவட்டும்..

காச்சிய பாலும்
கல்கண்டும் செந்தேனும்
ஏலங்கிராம்பும் இளம்
கொடிக்கா வெத்திலையும்
சாதிக் களிப்பாக்கும்
சங்குவெள்ளைச்
சுண்ணாம்பும்..

அத்தனையும் கொண்டு
அறிய வந்தார் அம்மானும்
பழ வருக்கம் கொண்டு
பாக்க வந்தார் அம்மானும்
ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

2 comments:

ஷைலஜா said...

அருமையா இருக்கு மீனா முடிஞ்சா நான் பாடித்தரேன் இந்தப்பாட்டை எல்லாம்!

meenamuthu said...

ஆஹா! ஷைலுவின் வரவு நல்வரவாகுக!

முடிஞ்சா நான் பாடித்தரேன் இந்தப்பாட்டை எல்லாம்//

முடிஞ்சா என்ன அவசியம் பாடுகிறீர்கள் பின் சுபாவிற்கு அனுப்புங்கள்.
நன்றி ஷைலு :)