31
சங்கு முழங்க என் கண்ணே
சமுத்திரத்தில் மீன் முழங்க
எங்கே முழங்குதுன்னு சாமி
ஏணி வச்சு பார்த்தாராம்
அடிக்கரும்பை வெட்டி
நடுக்கடலில் வில்லூணி
கருங்கடலில் வில்லூணி
கணபதியை கை தொழுது
செங்கடலில் வில்லூணி
சிவனாரை கை தொழுது
ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ
வள்ளியம்மை தெய்வானை
மாறாத சண்டையினால்
தெய்வானை ஓடி வந்து
சீவிலியை சாட்சி வச்சா
வள்ளியம்மை ஓடி வந்து
மயில்தனையோ சாட்சி வச்சா
ஏங்கானூம் வேலவரே
இந்த மதி உந்தனுக்கு
தேம்பி அழுதாளாம்
தேன்மொழியால் தெய்வானை
போங்கானும் வேலவரே
பொன்மலைக்கு அப்பாலே
பொங்கி அழுதாளாம்
பூங்கொடியாள் வள்ளியம்மை
கல்லுமலைக்குள்ளிருந்து
கதிர்வேலர் ஓடி வந்தார்
கடுகளவும் பயம் வேண்டாம்
காத்திடுவேன் உங்களையே!
கண்ணான கண்ணே என்
கண்மணியே கண்ணுறங்கு
ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ