Thursday, October 1, 2009

அம்மானார் எல்லையிலே ..

29

அம்மானார் எல்லையிலே
என்னவச்சா தோப்பாகும்

வச்ச பயிர் வளரும்
வாழைவச்சாத் தோப்பாகும்

சேத்த பயிர் வளரும்
தென்னைவச்சாத் தோப்பாகும்

தொட்ட எடந்தொலங்கும்
தோ..ட்டம் பயிராகும்

தென்னையும் வாழையும்
சேத்துவச்சாத் தோப்பாகும்

வாழையும் தென்னையும்
வாங்கிவச்சாத் தோப்பாகும்

இஞ்சி பயிராகும்
எலுமிச்சை தோப்பாகும்

மஞ்சப் பயிராகும்
மாதுளையும் தோப்பாகும்

ஏலக்கா.. காய்க்கும்
இரு..நூறு பிஞ்சுவிடும்

சாதிக்கா காய்க்கும்
தாய்மாமன் எல்லையில

வாழை இலை போட்டு
வந்தாரை கையமத்தி

வருந்தி விருந்துவைக்கும்
மகராசா பேர..னோ

தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமத்தி

தே..டி விருந்து வைக்கும்
திசை கருணர் பேரனோ.

ராராரோ ராரிரரோ
என் கண்ணே
ராரிரரோ ராராரோ.