Monday, July 26, 2010

ஏலம்பூ வாய் நோக..

36

ராரா.. ரோ ராரா.. ரோ 
ராரி.. ரேரோ...  ராரா ..ரோ.. 

ஏலம்பூ வாய் நோக  
ஏனழுதான் என்னரியான்

பாலுக்கழுதானோ
பவள வாய் பொன் சொரிய

தேனுக்கழுதானோ
செம்பவள வாய் நோக

கரும்புக்கழுதானோ
கற்கண்டு வாய்நோக

அரசோ நவமணியோ
உன் அங்கமெல்லாம் தங்க மயம்

கனிமொழிந்த வாயாலே
உன் கண்ணிலிட்ட மை கரைய

ஆளப்பிறந்தவனே அழுகிறதும்
உன் முறையோ

அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்

மசன்டையில அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு

பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியனார் பேரனுக்கு

பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு

தாங்கத் தடுக்கிருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்

ஏந்தத் தடுக்கிருக்கு உனக்கு
ஏந்திழையார் தாலாட்ட

கண்ணோ கமலப்பூ
உன் காதிரண்டும் தாமரப்பூ

மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ  கண்ணுறங்கு

ராரோ  ராரோ என் கண்ணே
ராரி ராரோ ராரோ

Thursday, July 15, 2010

அச்சடிக்கப்பொன் விளைய...

35

ராராரோ ராராரோ என்னய்யா
ராரிரேரோ ராராரோ

அச்சடிக்கப்பொன் விளைய
ஆதிச்சார் உன் தேசம்
வைத்திருக்கத் தந்தமகன்
நீ.. ஆளுவாய் நூறு குடி

பூப்பூத்த கோயிலிலே
பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான்
மாலைக்கழுதாயோ

ஆறாரும் அந்தணரும்
அப்போ வருங்கிளையும்
தாயாரும் சேனைகளும்
தழைக்கவென்று வந்தாயோ!

பெத்தாரும் சேனைகளும்
பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும்
மகிரவென்று வந்தாயோ!

செம்பொன் நல்ல தேரேறி
சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில்
வருவார் மருமகனோ (ராராரோ…)

Monday, July 12, 2010

தேனோ திரவியமோ...

34.

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

தேனோ திரவியமோ
தெவிட்டாத தெள்ளமுதோ

கட்டிக்கரும்போ
கற்கண்டோ சக்கரையோ

மாசி வடுவோ
வைகாசி மாம்பழமோ

கோடைப்பலாச்சுளையோ
குலை சேர்ந்த மாங்கனியோ

கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
குறையில்லா சித்திரமோ

சங்கரா உன் காவல்
சங்கடங்கள் நேராமல்

சாத்தையா உன் காவல்
காத்திடுவாய் எங்கள் குலம்

வேலவா உன் காவல்
வேறு வினை வாராமல்

சொக்கையா உன் காவல்
சொப்பனங்கள் தட்டாமல்

கருப்பையா உன் காவல்
கண்ணேறு வாராமல்

கண்ணேறு வாராமல்
கற்பூரம் சுத்திடுங்கள்

வெண்ணீறு இட்டிடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி சுத்த

சுண்ணாம்பும் மஞ்சளுமாய் திட்டி
சுத்திடுங்கள் சுந்தரர்க்கே