25
அதியமலை பொதியமலை
அகத்தீசர் ஆளும் மலை
கங்கை திரண்ட மலை
கிருபையுள்ள பொதியமலை
தேவர்களும் முனிவர்களும்
தேவ பூசை செய்யும் மலை
நாகமலை தோகைமலை
சுவாமி மலை சுற்றி வந்து
ஏழு மலை கழித்து
பழனி மலை போய்ச் சேர்ந்து
பார்வதியாள் பாலகனின்
பாதம் பணிந்து வந்தேன்
மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் செம்புருக
கண்டார் மனமுருக
பச்சை நிற வள்ளியம்மை
பவழ நிறத் தெய்வானை
சோதி நிற வேலவரும்
சொல்லி வரம் தந்தாரோ
இன்றைய தலைமுறையினரிடையே மறைந்து வரும் தாலாட்டுகளை மறந்து போகாமல் மலரும் நினைவுகளாய் இங்கே மறு பதிவு செய்கின்றேன். என் தாயார்,மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதமான தாலாட்டுகள்!
Tuesday, June 2, 2009
கட்டிக்கரும்பே...
24
கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்
யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ
கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி
தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக
அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..
கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்
யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ
கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி
தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக
அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..
Subscribe to:
Posts (Atom)