Thursday, July 9, 2009

மதுரை இரு காதம்

27

மதுர இரு காதம்
வாழ் மதுர முக்காதம்
அம்பத்தாறு தேசம்
ஆள வந்த சீமானோ

பாட்டனாராண்ட
பதினெட்டு ராச்சியமும்
நாட்டமுடன் ஆள வந்த
ராசாவோ எங்களய்யா(ராராரோ)

வெள்ளி வளை பூட்டி
விசாலமா தொட்டி கட்டி
தங்க வளை பூட்டி
சதுரலங்கா(ய்)த் தொட்டி கட்டி

பச்சை இலுப்ப வெட்டி
பால் வடிய தொட்டி கட்டி
தொட்டியில அட்டணக்கா(ல்)
தூங்குறது யாரு மகன்

இன்னார் மகனோ
இனியார் மருமகனோ
தனதாய் விளையாட
தவம் பெற்று வந்தவனோ

ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

Thursday, July 2, 2009

பிள்ளைக் கலி தீர்த்த..

26

ராராரோ ராரிரரோ
என்(கண்ணே)னய்யா
ராரிரரோ ராராரோ
பிள்ளைக் கலி தீர்த்த
பெருமானும்(பெருமகளும்)நீதானோ
மாம்பழத்தைக் கீறி
வயலுக்குரம் போட்டு
வெள்ளித்தேர் பூட்டி
மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும்
அதிட்டமுள்ளோர்(புத்திரியோ)புத்திரனோ
வாரிப் படியளக்கும்
மகிமையுள்ளோர் புத்திரனோ
சேற்றிலொரு செங்கழுநீர்
திங்களொரு பூப்பூக்கும்
நூற்றிலொரு பூவெடுத்து
முடிப்பார்(மகளோ)மகனோ நீ
ராராரோ ராரிரரோ
என்னய்யா(என்னாத்தா)
ராரிரரோ ராராரோ