Tuesday, November 4, 2008

யாரடிச்சார்..

15

ராராரோ ராரிரரோ
ராரிரேரோ ராராரோ

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிஞ்சார சொல்லியழு

மாமனடிச்சானோ
மல்லிகப்பூ செண்டாலே
அத்தையடிச்சாளோ
அமுதூட்டும் கையாலே (ரா..)

அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச்சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்

வெண்ணையில விலங்குசெய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம் (ரா..)

கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட வெண்ணையபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே! (ராராரோ..)