20
ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ
அய்யா(ஆத்தா)நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
வாழைக்கு பாய்கையிலேயே
வத்தியதாம் கண்ணீரும்!
ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ