Thursday, July 2, 2009

பிள்ளைக் கலி தீர்த்த..

26

ராராரோ ராரிரரோ
என்(கண்ணே)னய்யா
ராரிரரோ ராராரோ
பிள்ளைக் கலி தீர்த்த
பெருமானும்(பெருமகளும்)நீதானோ
மாம்பழத்தைக் கீறி
வயலுக்குரம் போட்டு
வெள்ளித்தேர் பூட்டி
மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும்
அதிட்டமுள்ளோர்(புத்திரியோ)புத்திரனோ
வாரிப் படியளக்கும்
மகிமையுள்ளோர் புத்திரனோ
சேற்றிலொரு செங்கழுநீர்
திங்களொரு பூப்பூக்கும்
நூற்றிலொரு பூவெடுத்து
முடிப்பார்(மகளோ)மகனோ நீ
ராராரோ ராரிரரோ
என்னய்யா(என்னாத்தா)
ராரிரரோ ராராரோ

2 comments: