Tuesday, August 10, 2010

ராராட்டத் தூணசைய...

37

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிரேரோ ராராரோ

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய

அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ

வில்லு முருகசைய
விளங்கப்பிறந்தவனோ

சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க

எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தவனோ

பிள்ளைக்கலி தீர்க்க வந்த
பெருமானும் நீ தானோ

மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ

எங்கள்குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ

ராராரோ! ராரிரரோ!
ராரிரரோ! ராரோ!




1 comment: