Tuesday, June 2, 2009

அதியமலை பொதியமலை

25

அதியமலை பொதியமலை
அகத்தீசர் ஆளும் மலை
கங்கை திரண்ட மலை
கிருபையுள்ள பொதியமலை

தேவர்களும் முனிவர்களும்
தேவ பூசை செய்யும் மலை
நாகமலை தோகைமலை
சுவாமி மலை சுற்றி வந்து

ஏழு மலை கழித்து
பழனி மலை போய்ச் சேர்ந்து
பார்வதியாள் பாலகனின்
பாதம் பணிந்து வந்தேன்

மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் செம்புருக
கண்டார் மனமுருக

பச்சை நிற வள்ளியம்மை
பவழ நிறத் தெய்வானை
சோதி நிற வேலவரும்
சொல்லி வரம் தந்தாரோ

5 comments:

கோபிநாத் said...

அருமை..

தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது போல!! (போதியமலை - பொதியலை)

நன்றி ;)

meenamuthu said...

ஆமா!கவனிக்கவில்லை.
இதோ திருத்தி விடுகிறேன்

ரொம்ப நன்றி கோபி
(பாராட்டியதற்கும் சேர்த்து:))

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு பாடல்களும் ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள்.
மீண்டும் வருவேன்

பனித்துளி சங்கர் said...

ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !

மீனாமுத்து said...

வருகைக்கு மிகவும் நன்றி சங்கர்.

// மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள் //

நீக்கிவிட்டேன் :)

// மீண்டும் வருவான் பனித்துளி !//

பனித்துளி மீண்டும் வரவேண்டும் இங்கே வெக்கை தாங்கலை :)