Monday, August 25, 2008

பரட்டை புளிய..

14

பரட்டை புளிய மரம்
பந்தடிக்கும் நந்தவனம்
நந்தவனம் கண் திறந்து
நாலுவகை பூ எடுத்து
பூவெடுத்து பூசை செய்யும்
புண்ணியவார்(பேத்தியோ)பேரனோ!
மலரெடுத்து பூசை செய்யும்
மகராசா(பேத்தியோ)பேரனோ!

வாழை இலை பரப்பி
வந்தாரை கையமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும்
மகராசா(பேத்தியோ)பேரனோ
தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமர்த்தி
தேடி விருந்துவைக்கும்
திசைக்கருணர்(பேத்தியோ)பேரனோ

No comments: