35
ராராரோ ராராரோ என்னய்யா
ராரிரேரோ ராராரோ
அச்சடிக்கப்பொன் விளைய
ஆதிச்சார் உன் தேசம்
வைத்திருக்கத் தந்தமகன்
நீ.. ஆளுவாய் நூறு குடி
பூப்பூத்த கோயிலிலே
பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான்
மாலைக்கழுதாயோ
ஆறாரும் அந்தணரும்
அப்போ வருங்கிளையும்
தாயாரும் சேனைகளும்
தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும்
பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும்
மகிரவென்று வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி
சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில்
வருவார் மருமகனோ (ராராரோ…)