Friday, May 23, 2014

...அங்கே தெரியுது பார்...


39

ராராரோ! ராரிரரோ
என் கண்ணே! ராராரோ! ராரிரரோ.....

மதலை சிறு குழந்தை என் கண்ணே
உன் மாமன்மார் வீடு எங்கே!

அங்கே தெரியுது பார் என் கண்ணே
ஆயிரம் கால் கல் தூணு!

தங்கத்தில் கால் நிறுத்தி என் கண்ணே
தாமரையால் பந்தலிட்டு!

வெள்ளியில் கால் நிறுத்தி என் கண்ணே
வெற்றிலையால் பந்தலிட்டு!

உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்!

குளிக்கக் கிணறுவெட்டி, என் கண்ணே
கும்பிடவோ சிலை எழுப்பி!

தண்ணிப் பந்தல் கட்டி என் கண்ணே
தாகம் தணியவச்சார்!

பள்ளிக் கூடம் கட்டி  என் கண்ணே
படிக்கவச்சார் உன் மாமன்!

வெள்ளி விளக்கெரியும் என் கண்ணே
உன் வெண் கொலுசு ஓசையிடும்!

தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல!

கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ராராரோ... ராரிரரோ...என் கண்ணே... ராராரோ...







2 comments:

Anonymous said...

அம்மா, தங்கள் தாலாட்டு பதிவுகள் அத்தனையும் மிக அருமை!

Ashwani Singh said...

Valuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home